ஆப்நகரம்

இரண்டு வாய்கள், நான்கு கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே இரண்டு வாய்கள், நான்கு கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Samayam Tamil 5 Jun 2018, 1:00 pm
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே இரண்டு வாய்கள், நான்கு கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Samayam Tamil cats
இரண்டு வாய்கள், நான்கு கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!


திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் பழனியாண்டி. வெற்றிலை விவசாயியான இவர், தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது வீட்டில் உள்ள பசுமாடு ஒன்று சமீபத்தில் கன்று குட்டியை ஈன்றது. அந்த கன்றுக்குட்டி வழக்கமான கன்றுக்குட்டியை போல இல்லாமல் இரண்டு வாய்கள், நான்கு கண்களுடன் வித்தியாசமான தோற்றத்துடன் இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பழனியாண்டி குடும்பத்தினர், உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த கால்நடை மருத்துவர் மோகன்ராஜ், சம்பவ இடத்துக்கு சென்று கன்றுக்குட்டியை பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், கன்றுக்குட்டிக்கு 2 தலைகள் இருப்பதால் அறுவை சிகிச்சை மூலம் ஒரு தலையை அகற்றி விடலாம். ஆனால், வாய் மட்டுமே தனியாக உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

தற்போது பழனியாண்டி குடும்பத்தினர் அந்த கன்றுக்குட்டிக்கு 2 வாய் வழியாகவும் பால் கொடுத்து வருகின்றனர். இரண்டு வாய்கள், நான்கு கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

அடுத்த செய்தி