ஆப்நகரம்

அமீர் மற்றும் டிவி சேனல் மீது வழக்கு: பல்வேறு அமைப்புகள் கண்டனம்

இயக்குனர் அமீர் மற்றும் தனியார் டிவி சேனல் மீது கோவை போலீஸ் பதிவு செய்த வழக்குகளை திரும்பப்பெற பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

Samayam Tamil 10 Jun 2018, 10:59 am
இயக்குனர் அமீர் மற்றும் தனியார் டிவி சேனல் மீது கோவை போலீஸ் பதிவு செய்த வழக்குகளை திரும்பப்பெற பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
Samayam Tamil hqdefault


கோவை மாவட்டத்தில் கடந்த 8ஆம் தேதி தனியார் செய்தி தொலைகாட்சி சேனல் ஒன்று பொது விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. மண்டபம் ஒன்றில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர் மீதும் நிகழ்ச்சியை நடத்திய சேனல் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இயக்குநர் அமீர் பேசியபோது பார்வையாளர்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சில பாஜகவினர் மேடைக்கு முன் வந்து அமீருக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, அந்த தொலைக்காட்சி சேனல் மீதும் சேனலின் கோவை செய்தியாளர் சுரேஷ் மற்றும் விவாதத்தில் பங்கேற்ற அமீர் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் ஜாமீனில் வெளிவர முடியாதபடி கோவை மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு ஊடக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் சமூக நல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகிறன்றன. பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப்பெறவும் வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி