ஆப்நகரம்

தூக்கம் களைத்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமை

குழந்தையின் அழுகையை பொறுக்காத மருத்துவமனை ஊழியர், குழந்தையின் காலை உடைத்த அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PTI 7 Feb 2017, 2:29 pm
டேராடூன்: குழந்தையின் அழுகையை பொறுக்காத மருத்துவமனை ஊழியர், குழந்தையின் காலை உடைத்த அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil caught on camera roorkee hospital ward boy breaking crying 3 day old babys leg
தூக்கம் களைத்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமை


பிறந்து 3 நாட்களே ஆன அந்த பச்சிளம் குழந்தை மூச்சு திணறல் காரணமாக கடந்த ஜன.28ஆம் தேதி ரூர்க்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை இரவில் அழுது, மருத்துவமனை பராமரிப்பு ஊழியரின் தூக்கத்தை கெடுத்ததில் ஆத்திரமடைந்த அந்த நபர் குழந்தையின் காலை உடைத்துவிட்டார்.

மறுநாள் குழந்தையை பரிசோதித்த ரூர்க்கி மருத்துவர்கள் குழந்தையை டேராடூன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அங்கு குழந்தையை பரிசோதித்தபோது, குழந்தையின் இடதுபுற கால் உடைந்திருந்தது தெரியவந்தது. இதயைடுத்து ரூர்க்கி மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, இச்சம்பவத்தின் உண்மை நிலை தெரியவந்தது. சிசிடிவி கேமராவில் இருந்த குழந்தை தாக்கப்பட்ட சம்பவம் அங்குள்ள ஊடகங்களில் ஒளிப்பரப்பப்பட்டன.

இது தொடர்பாக குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி உள்ள அந்த நபரை தேடிவருகின்றனர்.

In a shocking incident, a ward boy at a private hospital in Roorkee allegedly broke one of the legs of a three-day-old infant as he was annoyed with the baby crying incessantly.

அடுத்த செய்தி