ஆப்நகரம்

கள்ளக் காதலனுடன் மனைவியை பிடித்த கணவர் - ஆணுறுப்பை கடித்துவிட்டு தப்பிய மனைவி

தான் கள்ளக்காதலனுடன் இருப்பதை பார்த்த பயத்தில், கணவனின் ஆணுறுப்பை கடித்து தப்பிச் சென்ற மனைவியை போலீஸார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Samayam Tamil 3 Aug 2018, 10:53 am
வேலூர் : தான் கள்ளக்காதலனுடன் இருப்பதை பார்த்த பயத்தில், கணவனின் ஆணுறுப்பை கடித்து தப்பிச் சென்ற மனைவியை போலீஸார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
Samayam Tamil external affiairs


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தூரிமேலா கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஆடி மாதம் என்பதால், ஊர் திருவிழாவிற்காக தன் சொந்த ஊரான தூரிமேலாவுக்கு செந்தாமரை, ஜெயந்தி தம்பதியினர் சென்றுள்ளனர். ஊர் திருவிழாவை பார்க்க சென்ற மனைவி ஜெயந்தி இரவு 1 மணி ஆகியும் வரவில்லயே என அவரின் கணவர் செந்தாமரை தேடி சென்றுள்ளார்.

அப்போது ஜெயந்தி, அதே கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்ததை பார்த்துள்ளார்.

அவர்களின் உறவை கண்டிக்கும் பொருட்டு அவர்களை இழுத்து தெருவுக்கு கொண்டு வந்தார். அவர்களின் கள்ள உறவை ஊருக்கு தெரிவிக்க கத்தியுள்ளார் செந்தாமரை. ஆனால் ஊர் திருவிழா சப்தத்தால் யாருக்கும் கேட்கவில்லை.

இதனால் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என்ற காரணத்தால், பயத்தில் மனைவி ஜெயந்தி, செந்தாமரையின் ஆணுறுப்பை கடித்து, தன் கள்ள காதலனுடன் தப்பி ஓடியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் வேலூர் அரசு மருத்துவமனையில் செந்தாமரை அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸார் வழக்கு பதிந்து ஜெயந்தியை தேடிவருகின்றனார்.

அடுத்த செய்தி