ஆப்நகரம்

New Year Celebrations Chennai: புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடுங்க-காவல்துறை

புத்தாண்டு கொண்டாட்டம் சென்னை, பெங்களூரு, மும்பை, தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் களைகட்டும். ஆண்-பெண் உள்ளிட்டோர் கையில் மது பாட்டிலுடன் வேகமாக இருசக்கர நான்குசக்கர வாகனங்களில் ’ஹாப்பி நியூ யார்’ என கத்திக்கொண்டே செல்வது வாடிக்கையாகிவிட்டது. இதனைத் தவிர்க்க காவல்தூறை வெளியிட்டுள்ள எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன எனப் பார்ப்போம்.

Samayam Tamil 31 Dec 2018, 1:16 pm
புத்தாண்டு கொண்டாட்டம் சென்னை, பெங்களூரு, மும்பை, தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் களைகட்டும். ஆண்-பெண் உள்ளிட்டோர் கையில் மது பாட்டிலுடன் வேகமாக இருசக்கர நான்குசக்கர வாகனங்களில் ’ஹாப்பி நியூ யார்’ என கத்திக்கொண்டே செல்வது வாடிக்கையாகிவிட்டது. சென்னை ஈசிஆர் உள்ளிட்ட பல இடங்களில் பைக் ரேஸ் நடக்கிறது. பைக் செண்டர் ஸ்டாண்டை ரோட்டில் உராயவிட்டு தீப்பொறி பறக்க ஓட்டுவது, ஒரு சக்கரத்தில் வீலிங் செய்வது உள்ளிட்ட பல ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். இதனைத் தவிர்க்க காவல்தூறை வெளியிட்டுள்ள எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன எனப் பார்ப்போம்.
Samayam Tamil new year


சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள் தேவாலயங்கள், வழிபாட்டுத் தலங்களில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்தால் பாஸ்போர்ட் சமர்ப்பிக்கும்போது சிரமம் ஏற்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மெரினா, சாந்தோம், காமராஜர் சாலைகளில் போலீஸ் உதவிமைய கூடாரங்கள் அமைக்கப்படும். கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் மணலில் செல்லும் வாகனங்கள் பயன்படுத்தப்படும். பைக் ரேஸை தடுக்க 20 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையின் முக்கிய பகுதிகளில் 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடற்கரையோரங்களில் குதிரைப்படைகள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும். குற்றத் தடுப்பு நடவடிக்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை இரவு 9 மணி முதல் முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.

அடுத்த செய்தி