ஆப்நகரம்

படித்ததோ 8ஆம் வகுப்பு: சம்பாதித்ததோ ரூ.1.5 கோடி; ஆச்சரியப்படுத்திய இளைஞர்

8ஆம் வகுப்பு மட்டுமே படித்த இளைஞருக்கு, ரூ.1.5 கோடி பணம் கிடைத்துள்ளது.

TNN 22 Feb 2017, 10:40 am
ரோதக்: 8ஆம் வகுப்பு மட்டுமே படித்த இளைஞருக்கு, ரூ.1.5 கோடி பணம் கிடைத்துள்ளது.
Samayam Tamil chandigarh school dropout wins rs 1 5cr lottery in first try
படித்ததோ 8ஆம் வகுப்பு: சம்பாதித்ததோ ரூ.1.5 கோடி; ஆச்சரியப்படுத்திய இளைஞர்


பஞ்சாப் மாநிலம் பதேஹாத் மாவட்டம் தய்யார் கிராமத்தைச் சேர்ந்தவர் அசாத் சிங்(24). அவர் 8ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறைவு செய்துவிட்டார். தற்போது அவருடைய கிராமத்தின் பேருந்து நிலையம் அருகே சிறிய பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பஞ்சாப் மாநில அரசு நடத்தும் புத்தாண்டு லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். எப்படியும் ரூ.400 பரிசாக கிடைக்கும் என்று ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஜனவரி மாதம் வெற்றியாளர் குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக முடிவுகள் தள்ளிப் போனது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, முடிவுகள் வெளியானது. உடனடியாக தன்னுடைய லாட்டரி சீட்டு எண்ணை தேடியுள்ளார். லாட்டரியின் அதிகபட்ச பரிசிற்கு தேர்வானதை கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தார். முதல் முறையாக லாட்டரி வாங்கிய அவருக்கு, இவ்வளவு பெரிய பரிசு கிடைத்தது அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உடனடியாக தன்னுடைய உறவினர்களுக்கு தகவல் கொடுத்து, விமர்சையாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்பகுதி முழுவதும் இனிப்புகளும், இசையுமாக நிரம்பி வழிந்தது. முதலில் நல்ல வீடு வாங்க வேண்டும் என்றும், பெற்றோரின் விருப்பப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Purchasing lottery for the first time proved to be a life-changing decision for 24-year-old Azad Singh, a confectioner at Dayyar village of Fatehabad district, after he won the cash prize of Rs 1.5 crore.

அடுத்த செய்தி