ஆப்நகரம்

திருநெல்வேலி பெண் டாக்டர் உடல் கருகிய நிலையில் கண்டெடுப்பு!

திருநெல்வேலி மாவட்டம் தலையூத்து பகுதியில் பெண் மருத்துவரின் உடல் கருகிய நிலையில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது

TOI Contributor 16 Nov 2017, 12:33 pm
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தலையூத்து பகுதியில் பெண் மருத்துவரின் உடல் கருகிய நிலையில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil charred body of lady doctor found near tirunelveli in tamil nadu
திருநெல்வேலி பெண் டாக்டர் உடல் கருகிய நிலையில் கண்டெடுப்பு!


தலையூத்து பகுதியில் உஷாராணி (51) என்ற பெண் மருத்துவர் நர்சரி ஹோம் ஒன்றை நடத்தி வந்தார். கணவரைப் பிரிந்த இவர், அவரது தந்தை ரத்தினத்துடன் (80) வசித்து வந்துள்ளார்.

இவரது குழந்தைகள் மேற்படிப்பிற்காக வெளியூரில் தங்கியிருப்பதால், இவர் தனிமையில் இருந்துள்ளார். இதனால், இவர் பெரும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிய வருகிறது.

இந்நிலையில், அவரது வீட்டின் பாத்ரூமில் கருகிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, போலீஸ் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடக்கக்கட்ட விசாரணையில், அவர் மனஉளைச்சல் காரணமாக தீவைத்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி