ஆப்நகரம்

சென்னையில் நடுரோட்டில் பஸ்சை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்த டிரைவர்; பயணிகள் அவதி

சென்னையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ்சை நடுரோட்டில் நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்கச் சென்ற டிரைவரால், பயணிகள் அவதியுற்றனர்.

TNN 25 Sep 2017, 10:35 am
சென்னையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ்சை நடுரோட்டில் நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்கச் சென்ற டிரைவரால், பயணிகள் அவதியுற்றனர்.
Samayam Tamil chennai bus driver stopped bus and goes urine
சென்னையில் நடுரோட்டில் பஸ்சை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்த டிரைவர்; பயணிகள் அவதி


சென்னையைில் இன்று காலை சுமார் 9 மணியளவில் கோயம்பேட்டிலிருந்து பட்டினப்பாக்கம் செல்லும் 12 பி பஸ் வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.

திங்கள்கிழமை என்பதாலும் அலுவலக நேரம் என்பதாலும், அடுத்தடுத்த பஸ் ஸ்டாப்பில் பயணிகளின் கூட்டம் படியில் தொற்றிக்கொண்டு திணறிக் கொண்டிருந்தது..

இந்நிலையில், கோடம்பாக்கம் சாலையில் வரும் போது, திடீரென்று பஸ் சாலை ஒரத்தில் நிறுத்தப்பட்டது.

என்ன ஆனது என்று பஸ்சில் இருந்த கண்டக்டரும் பயணிகளும் பார்த்த போது, டிரைவர் மெதுவாக இறங்கி வந்து அருகில் இருந்த மாநகராட்சி குப்பைத் தொட்டியின் அருகே சிறுநீர் கழிக்க சென்றார்.

ஏற்கனவே, அலுவலகம் செல்பவர்களும் பள்ளி மாணவர்களும் காலதாமதமாகி விட்டது என்ற பதற்றத்தில் இருந்த நிலையில், சிறுநீர் கழிக்கச் சென்ற டிரைவர் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேல் வராமல் இருந்தார்.

இதனால், கண்டக்டர் உட்பட பொதுமக்கள் அனைவரும், புலம்பத் தொடங்கினர். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருந்த பயணிகள், ஒரு கட்டத்தில், இது போன்ற இயற்கை உபாதைகள் எல்லாம், பஸ்சை எடுப்பதற்கு முன்பு கோயம்பேடு பஸ் நிலையத்திலேயே முடித்து விட்டு வர வேண்டாமா என்று புலம்பினர்,

இதனையடுத்து, சிறிது நேரத்திற்கு பின், சிறுநீர் கழிக்கச் சென்ற டிரைவர் வந்த பின் பஸ் புறப்பட்டுச் சென்றது.

ஒருபக்கம் டிரைவர் பக்கம் தவறு இருந்தாலும், இன்னொரு பக்கம் இயற்கையையும் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு திருத்தம் செய்ய வேண்டும்.

மழைக்காலம் என்பதால், அனைவருக்கும் சிறுநீர் அடிக்கடி வருவது இயல்பு தான். அதுமட்டுமில்லாமல், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் இதே நிலைமை தான். டிரைவரும் அவருடைய நிலையில் இருந்து கண்டிப்பாக தன்னுடைய இயற்கை உபாதையை அடிக்க முயற்சி செய்திருப்பார். அது முடியாமல் போனதால், தான் இந்த நிலைமை என்று நம்மை நாமே ஆசுவாசப்படுத்த வேண்டும்.

ஒரு ஆணாக இருப்பதால் பொது இடத்தில அவரால் பொது இடத்தில் சிறுநீர் கழிக்க முடிகிறது. இதே இயற்கை உபாதையின் அழுத்தம், நமது பெண்களுக்கும் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அதற்கு ஏற்ற கழிப்பிட வசதி ஏற்படுத்தாமல் இருப்பதால், தினம் தினம் அவர்கள் அவதியுற்று வருகின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.

இது போன்ற பெண்களின் பிரச்னைக்கு ஒரே தீர்வு, ஆங்காங்கே கழிப்பிட வசதி வைப்பதோடு மட்டும் முடிந்து விடாது, அதை சரியான முறையில் தினமும் பராமரித்தால் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.

அடுத்த செய்தி