ஆப்நகரம்

வரதட்சணை கொடுமையால் கூவம் ஆற்றில் இருந்து, பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண்!

இளம்பெண் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Mar 2018, 11:30 am
சென்னை: இளம்பெண் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil chennai girl jeevitha suicide for dowry torture
வரதட்சணை கொடுமையால் கூவம் ஆற்றில் இருந்து, பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண்!


கடந்த சனிக்கிழமை அன்று, கிண்டி - சைதாப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பாலத்திற்கு கீழே கூவம் ஆற்றில் இளம்பெண் பிணம் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டனர்.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், அவர் பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ரோஸ் என்பவரின் மனைவி ஜீவிதா(25) என்று தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தாம்பரத்தில் இருந்து மின்சார ரயிலில் ஜீவிதா வந்துள்ளார். கிண்டி கூவம் ஆற்றை கடக்கும் போது, கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார்.

இதற்கு ஜீவிதாவின் கணவர் குடும்பம் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததே காரணம் என்று தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ஜீவிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chennai girl Jeevitha suicide for dowry torture.

அடுத்த செய்தி