ஆப்நகரம்

டாஸ்மாக் வசூல் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி; தப்பிய ரூ.50 லட்சம்!

டாஸ்மாக் வசூல் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TNN 30 Sep 2017, 12:11 pm
சென்னை: டாஸ்மாக் வசூல் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil chennai tasmac money robbery attempt
டாஸ்மாக் வசூல் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி; தப்பிய ரூ.50 லட்சம்!


சென்னையில் ஏராளமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. அவற்றில் வசூல் செய்யப்பட்ட ரூ.50 லட்சம் பணத்தை டாஸ்மாக் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

அவர்களுடன் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்களும் போய்க் கொண்டிருந்தனர். மத்திய கைலாஷ் அருகே வந்த போது, மர்மநபர்கள் சிலர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயற்சித்தனர்.

அப்போது இருதரப்புக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடி வந்தனர்.

அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் ரூ.50 லட்சம் வசூல் பணம் தப்பியது.

இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai Tasmac money robbery attempt.

அடுத்த செய்தி