ஆப்நகரம்

சென்னை: கத்தி முனையில் 50 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த திருடன்!

ரூ.8,500 திருடிய வழக்கில் மாட்டிய திருடன், கத்தி முனையில் 50 பெண்கள் வரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளான்

TNN 17 Nov 2017, 3:04 pm
சென்னை: ரூ.8,500 திருடிய வழக்கில் மாட்டிய திருடன், கத்தி முனையில் 50 பெண்கள் வரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளான்.
Samayam Tamil chennai thief arrested for mugging turns out to be serial rapist
சென்னை: கத்தி முனையில் 50 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த திருடன்!


சில தினங்களுக்கு முன், சாஃப்ட்வேர் என்ஜினியர் ஒருவரிடம் ரூ. 8,500 திருடியதாக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பட்டதாரியான மதன் அறிவழகன் (28) என்பவரைப் போலீஸார் சிறைப்பிடித்து வைத்தனர்.

அப்போது அவர் போனை சோதனை செய்த போலீஸார் அதில் மதன் பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாக பதிவு செய்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் மதன், படிப்பை முடித்தப் பின் பெங்களூரில் உள்ள ஒரு சாஃப்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும், கடந்த 2015 ஆம் ஆண்டு வேலைத் தேடி சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வேலை கிடைக்காததால் திருட்டுத் தொழிலில் ஈடுபட்ட மதன், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து திருடி வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்களை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 50 பெண்கள் வரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறும் மதன், அதை வீடியோ எடுத்த அந்தப் பெண்களை மிரட்டி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி