ஆப்நகரம்

தன் கணவர் இறந்த செய்தியை நேரலையில் படித்த செய்தி வாசிப்பாளர்!

தன் கணவர் இறந்த செய்தியை நேரலையில் படித்த செய்தி வாசிப்பாளர்!

TOI Contributor 9 Apr 2017, 5:55 am
சத்தீஸ்கர் : தன் கணவர் இறந்த செய்தியை, செய்தி வாசிப்பாளர் ஒருவர் பிரேக்கிங் செய்தியாக படித்த சம்பவம் நடந்துள்ளது.
Samayam Tamil chhattisgarh tv anchor reads out breaking news of her husbands death in car accident
தன் கணவர் இறந்த செய்தியை நேரலையில் படித்த செய்தி வாசிப்பாளர்!


ஐபிசி 24 எனும் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர் சுப்ரீத் கவுர். இவருக்கும் ஹர்ஷாத் கவடே என்பவருக்கும் கடந்த 1 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் ராய்ப்பூரில் வசித்து வந்தனர். நேற்று (08.04.17) காலை கவுர் செய்தி வாசித்துக்கொண்டிருக்கும் போது, பிரேக்கிங் செய்தி வந்துள்ளது. அதில் ரெனால்ட் டஸ்டர் வாகனம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது என்றும், அதில் பயணித்த ஐவரில், மூவர் உயிரிழந்துவிட்டதாக செய்தியாளர் தொலைபேசியில் கூறியுள்ளார். அதில் தன் கணவர் பயணித்ததை தெரிந்த கொண்ட கவுர் அப்போது எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல், செய்தி முடிந்ததும் வெளியே வந்து கதறி அழுதுள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் கூறும் போது, கவுர் செய்தி வாசித்துவிட்டு வெளியே வந்ததும் அவர் உறவினர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரத்தொடங்கியது. கவுர் அந்த செய்தியை வாசிக்கும் போதே அவர் கணவர் இறந்துவிட்டார். ஆனால் நாங்கள் அதை அவரிடம் அப்போது சொல்லவில்லை, ஏனென்றால் அவ்வளவு தைரியம் எங்களுக்கு இல்லை என்று கூறினார்.

அடுத்த செய்தி