ஆப்நகரம்

வாளி தண்ணீரில் மூழ்கிய குழந்தை பலி

பெரிய வாளி தண்ணீரில் மூழ்கிய ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

TNN 28 Feb 2017, 10:08 pm
சென்னை : பெரிய வாளி தண்ணீரில் மூழ்கிய ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
Samayam Tamil child drown in bucket
வாளி தண்ணீரில் மூழ்கிய குழந்தை பலி


சென்னை பெரம்பூர் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வந்தனர், இந்த தம்பதிக்கு ரோஹன் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. ரோஹன் நேற்று மதியம் தனது விட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிலுள்ள பெரிய வாளி நிறைய தண்ணீர் இருந்தது. அந்த வாளி அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அந்த வாளியில் தவறி விழுந்தாக கூறப்படுகிறது.

இதனை அந்த குழந்தைகளின் பெற்றொர் யாரும் பார்க்கவில்லை. பிறகு நேரம் கழித்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என உணர்ந்த பெற்றோர் ரோஹனை தேடியுள்ளனர்.

அப்போது விட்டிலுள்ள பெரிய வாளியில் உயிரிழந்த நிலை அந்த குழந்தை பெற்றோர் கண்டெடுத்தனர். குழந்தை இறந்ததை கண்டு பெற்றோர்கள் கதறி அழுதனர், பெரிய வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Child drown in bucket

அடுத்த செய்தி