பூஜியன்: ரயிலில் விழுந்து சாகச் சென்ற இளம்பெண்ணை, எகிறி குதித்து காப்பாற்றிய ரயில்வே ஊழியரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.
சீனாவின் பூஜியன் மாகாணத்தின் புடியன் ரயில் நிலையம், கடந்த 10ஆம் தேதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் நண்பகல் வேளையில் ரயில் ஒன்றின் முன் பாய்ந்து சென்று தற்கொலை செய்ய, இளம்பெண் ஒருவர் வேகமாக ஓடியுள்ளார். அப்போது வெங் ஜியாங்ஷாங் என்ற ரயில்வே ஊழியர், பாய்ந்து சென்று இளம்பெண்ணின் கைகளை பிடித்துக் கொண்டார். அப்போது இளம்பெண்ணின் கால்கள் ரயில் தண்டவாளத்தின் மேற்புறம் தொங்கியது. இதற்கிடையில் ரயில் அருகில் வந்து விட்டது.
உடனடியாக தனது கால்களால் இளம்பெண்ணின் கால்களை பிடித்து இழுத்து, ரயில் நிலையத்திற்குள் கொண்டு வந்துவிட்டார். அதனால் அப்பெண்ணின் தற்கொலை தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த காட்சிகள் அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. உரிய நேரத்தில் சாமர்த்தியமாக இளம்பெண்ணை காப்பாற்றிய ரயில்வே ஊழியரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Chinese Railway Worker Narrowly Saves Suicidal Student Jumping in Front of Train.
சீனாவின் பூஜியன் மாகாணத்தின் புடியன் ரயில் நிலையம், கடந்த 10ஆம் தேதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் நண்பகல் வேளையில் ரயில் ஒன்றின் முன் பாய்ந்து சென்று தற்கொலை செய்ய, இளம்பெண் ஒருவர் வேகமாக ஓடியுள்ளார். அப்போது வெங் ஜியாங்ஷாங் என்ற ரயில்வே ஊழியர், பாய்ந்து சென்று இளம்பெண்ணின் கைகளை பிடித்துக் கொண்டார். அப்போது இளம்பெண்ணின் கால்கள் ரயில் தண்டவாளத்தின் மேற்புறம் தொங்கியது. இதற்கிடையில் ரயில் அருகில் வந்து விட்டது.
உடனடியாக தனது கால்களால் இளம்பெண்ணின் கால்களை பிடித்து இழுத்து, ரயில் நிலையத்திற்குள் கொண்டு வந்துவிட்டார். அதனால் அப்பெண்ணின் தற்கொலை தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த காட்சிகள் அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. உரிய நேரத்தில் சாமர்த்தியமாக இளம்பெண்ணை காப்பாற்றிய ரயில்வே ஊழியரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Chinese Railway Worker Narrowly Saves Suicidal Student Jumping in Front of Train.