ஆப்நகரம்

24 பேருக்காக தனி ரயில்! தலைகீழான ரயில்வே திட்டம்!

கோவையிலிருந்து பெங்களூருக்கு இன்று முதல் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலில் பயணிக்க 24 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருப்பதால் ரயில்வே இந்த ரயில் சேவை கைவிடும் எண்ணத்தில் இருப்பதாகக் தெரியவந்துள்ளது.

TNN 18 Jul 2017, 6:54 pm
கோவையிலிருந்து பெங்களூருக்கு இன்று முதல் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலில் பயணிக்க 24 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருப்பதால் ரயில்வே இந்த ரயில் சேவை கைவிடும் எண்ணத்தில் இருப்பதாகக் தெரியவந்துள்ளது.
Samayam Tamil citing poor patronage rly plans to stop train to krishnarajapuram
24 பேருக்காக தனி ரயில்! தலைகீழான ரயில்வே திட்டம்!


கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2016ஆம் ஆண்டு கோவைக்கு வந்த மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, கோவையிலிருந்து பெங்களூரில் உள்ள கிருஷ்ணராஜபுரத்துக்கு இரவு நேர ரயில் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதன்படி, ஜூலை 18 (இன்று) முதல் கோவை - கிருஷ்ணராஜபுரம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் செப்டம்பர் 26-ஆம் தேதி வரை 11 வாரங்களுக்கு சோதனை முறையில் இயக்கப்பட உள்ளது. ஆனால், இந்த ரயிலின் சேவை இன்று தொடங்க உள்ள நிலையில் முதல் பயணித்திற்கே 24 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர் என்பதால் ரயில்வே அதிருப்தி அடைந்துள்ளது.

இதன் எதிரொலியாக இந்த ரயில் சேவையை ஒரே பயணத்துடன் முடித்துக்கொள்வது பற்றி ரயில்வே பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் இருந்து புறப்படும் ரயில் (06060) செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 8.40 மணிக்குப் புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் வழியாக புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கிருஷ்ணராஜபுரம் சென்றடையும். எதிர் மார்க்கத்தில், கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து புறப்படும் ரயில் (06059) புதன்கிழமை இரவு 9.30 அளவில் புறப்பட்டு திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக வியாழக்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு கோவை வந்தடையும்.

அடுத்த செய்தி