ஆப்நகரம்

சி.ஐ.டி.யூ,ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம்

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று தொழிற்சங்கங்கள்,அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்,

Samayam Tamil 9 Jan 2019, 10:22 pm
13 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று தொழிற்சங்கங்கள்,அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
Samayam Tamil vlcsnap-2019-01-10-15h04m07s034


பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குவதை எதிர்த்தும்,புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், தொழிலார்களுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்,விலை வாசியை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 13 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று தொழிற்சங்கங்கள்,அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்,

இதன் ஒரு பகுதியாக சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கிண்டியில் இரயில் நிலையத்தில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சி.ஐ.டி.யூ மாநில தலைவர் செளந்தரராஜன் தலைமையில், நடைபெற்ற இந்த ரயில் மரியல் போராட்டத்தில் 500.க்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ரயில் மரியலில் ஈடுபட முயன்ற தொழிலார்களுக்கும் காவல் துறையினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது, பின்னர் தடையை மீறி ரயில் மரியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் காவல் துறையினர் கைது செய்து வைத்துள்ளனர்,பின்னர் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்க செயலாளர் மூர்த்தி தலைமையில் மீண்டும் ரயில் மறியலில் ஈடுப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்தால் ரேஸ் கோர்ஸ் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் பயணிகள் அரைமணி நேரம் ரயில் நிலையத்திற்குள் செல்ல முடியாத சூழல் நிலவியது. நாடு முழுவதும் 20 கோடி தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர், இது மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது,பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது, மேலும் மத்திய மோடி அரசு தொழிலாளர் நலன் சார்ந்த சலுகைகளை தொடர்ந்து ஒடுக்கி வரும் ஒரு அரசாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலை மாறவில்லை என்றால் தற்போது இரண்டு தினங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தை பெரிய அளவில் திட்டமிட்டு நடத்துவோம் என்றும் எச்சரித்தனர்.

அடுத்த செய்தி