புனே: காதலை ஏற்க மறுத்த எம்.எல்.ஏ மகளை இளைஞர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, விரல்களை நறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனே அருகே யவத்மால் மாவட்டத்தின் வனி தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ.வாக இருக்கும் சஞ்சீவ்ரெட்டி போத்குர்வாரின் மகள் அஷ்வினி போத்குர்வார்(22) எம்பிஏ வாக்கட் எனும் பகுதியில் ஊழல் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு அருகேயுள்ள தங்கி படிக்கிறார்.
இந்நிலையில், நேற்று கல்லூரிக்கு சென்ற அஷ்வினியை, அவருடன் படித்து வரும் ராஜேஷ் பக்ஷி(23) எனும் இளைஞர், கல்லூரி வளாகத்தில் வைத்து கூர்மையான ஆயுதத்தால் தாக்க முயற்சித்துள்ளார். இந்த தாக்குதலில் தன்னை தற்காத்துக் கொள்ள கைகளால் தடுத்தபோது, அஷ்வினியின் கை விரலில் கத்திப்பட்டு இடது கையின் சுண்டுவிரல் துண்டானது. மற்ற விரல்களிலும் ஆழமான காயம் ஏற்பட்டது. மேலும் உதடு, உள்ளங்கையில் காயங்களும், அவரது 3 பற்களும் சேதமடைந்தன.
இதையடுத்து அருகில் இருந்து மாணவர்கள் அஷ்வினியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ராஜேஷை பிடிக்க முயன்ற மாணவர்களையும் ஆயுதத்தால் தாக்கியுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, வெட்டுப்பட்ட அஷ்வினியின் கை விறல் தேடி கண்டுபிடிக்கப்பட்டது. கூடவே ராஜேஷையும் சுற்றி வளைத்து பிடித்த மாணவர்கள், வாக்கட் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் ராஜேஷை ஒப்படைத்தனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் வாக்கட் பகுதியில் தற்போது வசித்து வருகிறார். கைது செய்யப்பட்ட ராஜேஷ் மீது கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஷ்வினியை கடந்த சில மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்த ராஜேஷ், தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி அஷ்வினியை வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் அஷ்வினி புகார் தெரிவித்ததையடுத்து, சுமார் மணிநேரம் ராஜேஷிடம் வாக்குவாதம் செய்து, அவருக்கு ஆலோசனை வழங்கிய நிர்வாகம், இனி அஷ்வினியின் விவகாரத்தில் தலையிடக் கூடாது என ராஜேஷிடம் எழுதி வாங்கியுள்ளது.
கடிதம் எழுதிக் கொடுத்த ஒரு சில நிமிடங்களில் ராஜேஷ் அஷ்வினியை தாக்கியுள்ளார். இது குறித்து யவத்மால் மாவட்டத்தில் வசித்து வரும் பாஜக எம்.எல்.ஏ சஞ்சீவரெட்டி மற்றும் அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மகளை காண வாக்கட் வந்தனர்.
MBA student Ashwini Bodkurwar (22), the daughter of BJP MLA Sanjivreddi Bodkurwar, was attacked on Monday morning by one of her classmates with a sharp weapon barely a few meters away from the main gate of her college at Tathawade.
புனே அருகே யவத்மால் மாவட்டத்தின் வனி தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ.வாக இருக்கும் சஞ்சீவ்ரெட்டி போத்குர்வாரின் மகள் அஷ்வினி போத்குர்வார்(22) எம்பிஏ வாக்கட் எனும் பகுதியில் ஊழல் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு அருகேயுள்ள தங்கி படிக்கிறார்.
இந்நிலையில், நேற்று கல்லூரிக்கு சென்ற அஷ்வினியை, அவருடன் படித்து வரும் ராஜேஷ் பக்ஷி(23) எனும் இளைஞர், கல்லூரி வளாகத்தில் வைத்து கூர்மையான ஆயுதத்தால் தாக்க முயற்சித்துள்ளார். இந்த தாக்குதலில் தன்னை தற்காத்துக் கொள்ள கைகளால் தடுத்தபோது, அஷ்வினியின் கை விரலில் கத்திப்பட்டு இடது கையின் சுண்டுவிரல் துண்டானது. மற்ற விரல்களிலும் ஆழமான காயம் ஏற்பட்டது. மேலும் உதடு, உள்ளங்கையில் காயங்களும், அவரது 3 பற்களும் சேதமடைந்தன.
இதையடுத்து அருகில் இருந்து மாணவர்கள் அஷ்வினியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ராஜேஷை பிடிக்க முயன்ற மாணவர்களையும் ஆயுதத்தால் தாக்கியுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, வெட்டுப்பட்ட அஷ்வினியின் கை விறல் தேடி கண்டுபிடிக்கப்பட்டது. கூடவே ராஜேஷையும் சுற்றி வளைத்து பிடித்த மாணவர்கள், வாக்கட் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் ராஜேஷை ஒப்படைத்தனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் வாக்கட் பகுதியில் தற்போது வசித்து வருகிறார். கைது செய்யப்பட்ட ராஜேஷ் மீது கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஷ்வினியை கடந்த சில மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்த ராஜேஷ், தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி அஷ்வினியை வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் அஷ்வினி புகார் தெரிவித்ததையடுத்து, சுமார் மணிநேரம் ராஜேஷிடம் வாக்குவாதம் செய்து, அவருக்கு ஆலோசனை வழங்கிய நிர்வாகம், இனி அஷ்வினியின் விவகாரத்தில் தலையிடக் கூடாது என ராஜேஷிடம் எழுதி வாங்கியுள்ளது.
கடிதம் எழுதிக் கொடுத்த ஒரு சில நிமிடங்களில் ராஜேஷ் அஷ்வினியை தாக்கியுள்ளார். இது குறித்து யவத்மால் மாவட்டத்தில் வசித்து வரும் பாஜக எம்.எல்.ஏ சஞ்சீவரெட்டி மற்றும் அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மகளை காண வாக்கட் வந்தனர்.
MBA student Ashwini Bodkurwar (22), the daughter of BJP MLA Sanjivreddi Bodkurwar, was attacked on Monday morning by one of her classmates with a sharp weapon barely a few meters away from the main gate of her college at Tathawade.