ஆப்நகரம்

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொணட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 24 Sep 2016, 10:33 pm
கோவை : கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொணட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil college girl suicide in hostel
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை


கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அய்யப்பராஜ். இவருடைய மகள் திவ்யா (வயது 19). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார். கல்லூரி விடுதியிலேயே தங்கி இருந்து படித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடுதியில் இருந்த திவ்யா திடீரென்று அங்கிருந்த சோப்பு எண்ணெயை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை விடுதி காப்பாளர் மற்றும் மாணவிகள் மீட்டு பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே திவ்யா இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்த செய்தி