ஆப்நகரம்

திருச்சி: கலைநயமான ஓவியங்களால் கருத்து சொல்லும் கல்லூரி மாணவர்கள்!!

திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர், திருச்சியில் உள்ள மேம்பாலம் ஒன்றில் சமூக கருத்துகளை கொண்ட வண்ண மயமான ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

Samayam Tamil 24 Jul 2018, 5:42 pm
திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர், திருச்சியில் உள்ள மேம்பாலம் ஒன்றில் சமூக கருத்துகளை கொண்ட வண்ண மயமான ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.
Samayam Tamil திருச்சி: கலைநயமான ஓவியங்களால் கருத்து சொல்லும் கல்லூரி மாணவர்கள்!!
திருச்சி: கலைநயமான ஓவியங்களால் கருத்து சொல்லும் கல்லூரி மாணவர்கள்!!


சிறுகனூர் பகுதியில் உள்ள பிரைம் நெஸ்ட் கல்லூரியைச் சேர்ந்த 30 மாணவர்கள், திருச்சி மாநகராட்சியின் அனுமதியுடன், பாலக்கரை பகுதியில் உள்ள மேம்பாலத்தில் ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

‘தூய்மையான மற்றும் பசுமையான திருச்சி’ என்ற தலைப்பில் ஓவியங்களை வரைந்து வரும் மாணவர்கள், பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகளை விளக்கும் ஓவியங்களையும் வரைந்து வருகின்றனர். இந்த ஓவியங்கள், மேம்பாலத்தை வண்ணமயமாக்குவதோடு, மக்களுக்கு தூய்மையின் அவசியத்தைப் பற்றியும் எடுத்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்பாலங்களில் சினிமா மற்றும் விளம்பர போஸ்டர்களை அனுமதியின்றி ஒட்டுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள இம்முயற்சியை, வரும் காலங்களில் நகரம் முழுவதும் உள்ள மேம்பாலங்களில் நடைமுறைப்படுத்த மாநகராட்சி நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி