ஆப்நகரம்

பேஸ்புக்கில் வேலை என பெண்ணிற்கு அழைப்பு: இண்டர்வியூவில் சில்மிஷம் செய்தவர் கைது

பேஸ்புக்கில் வேலை என பெண்ணிற்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, இண்டர்வியூவில் சில்மிஷம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

TNN 23 Apr 2017, 12:14 pm
பெங்களூரு: பேஸ்புக்கில் வேலை என பெண்ணிற்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, இண்டர்வியூவில் சில்மிஷம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil conman molests bengaluru woman after facebook job offer arrested
பேஸ்புக்கில் வேலை என பெண்ணிற்கு அழைப்பு: இண்டர்வியூவில் சில்மிஷம் செய்தவர் கைது


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வருபவர் தினேஷ்ராஜ் கவுடா(32). அவர் தன்னை பேஸ்புக் நிறுவனத்தில் மேலதிகரியாக பணியாற்றி வருவதாக பொய்யாக இணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் டேலண்ட் சோர்ஸ் இந்தியா நிறுவனம் என்ற பெயரில், ஏராளமானோருக்கு வேலைக்கான இண்டர்வியூவிற்கு அழைத்து மோசடி செய்துள்ளார். இந்நிலையில் மதிக்கெரா பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், டேலண்ட் சோர்சில் தனது பயோ டேட்டாவை பதிவேற்றம் செய்துள்ளார். பின்னர் மதிக்கெரா பெண்ணிற்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசி, இண்டர்வியூவிற்கு வருமாறு அழைத்துள்ளார். மேலும் தான் பேஸ்புக் நிறுவனத்தின் மேலதிகாரி என்றும், அவர் எச்.ஆர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் ஒன் - டூ -ஒன் இண்டர்வியூவிற்கு வருமாறும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பேஸ்புக் வேலை என்பதால் சற்று கவர்ச்சிகரமாக உடை, நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதை நம்பி இண்டர்வியூவிற்கு சென்ற போது, அங்கு ஒரு ஆண் இருந்துள்ளார். அவர் அப்பெண்ணை அறை ஒன்றிற்கு அழைத்து, தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து அவரை அறைந்துவிட்டு, அங்கிருந்து அப்பெண் வெளியேறிவிட்டார். அந்த சம்பவம் காவல்துறையில் புகார் அளித்து, தினேஷ்ராஜின் தொலைபேசி அழைப்புகளை தீவிரமாக கண்காணித்து, அவரது வீட்டில் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். மதிக்கெரா பெண்ணை போல ஏராளமான பெண்கள் தினேஷ் ஏமாற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறை தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

A woman from Bengaluru got a man arrested after he posed as a top Facebook executive and issued fake call letters to her, offering lucrative jobs with the social media giant.

அடுத்த செய்தி