ஆப்நகரம்

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி; அதிமுக பிரமுகர் வீட்டு முன் தீக்குளித்தவர் உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக அதிமுக பிரமுகர் ரூ.11 லட்சத்தை வாங்கி மோசடி செய்ததாக, தீக்குளித்த கூலி தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

TNN 20 Nov 2017, 11:12 am
திருச்செங்கோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக நூலகர் ரூ.11 லட்சத்தை வாங்கி மோசடி செய்ததாக, தீக்குளித்த கூலி தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Samayam Tamil coolie douzed himself with kerosene in front of a admk government librarian house in namakkal
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி; அதிமுக பிரமுகர் வீட்டு முன் தீக்குளித்தவர் உயிரிழப்பு


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள பள்ளிப்பாளையத்தில் கூலி வேலை பார்த்து வரும் கூலி தொழிலாளி தங்கராசு. இவர் தன்னுடைய அண்ணன் மகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று அதிமுக பிரமுகரும் நூலகருமான கல்யாணி என்பவரிடம் தெரிவித்திருந்தார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய கல்யாணி, 11 லட்சம் ரூபாய் கொடுத்தால், அரசு வேலை வாங்கி தருவேன் என்று கூலி தொழிலாளியிடம் உறுதியுளித்தயைத் தொடர்ந்து, தங்கராசும் பணத்தை திரட்டி ஒப்படைத்தார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் காலை அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 11 லட்சம் மோசடி செய்ததாக, நூலகரின் வீட்டு முன்பு கூலி தொழிலாளி, தனது உடலில் மண்ணென்ணய் ஊற்றி தீக்குளித்தார். உடலில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி தங்கராசு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான கல்யாணியை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி