ஆப்நகரம்

மிளகாய் பொடி தூவி அமெரிக்க டாலர்களை வழிப்பறி செய்த 7 பேர் கைது!

சென்னையில் மிளகாய் பொடி தூவி ஜாஃபர் சாதீக் என்பவரிடம் இருந்து அமெரிக்க டாலர்களை வழிப்பறி செய்த விவகாரத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 27 Dec 2018, 5:07 am
சென்னையில் மிளகாய் பொடி தூவி ஜாஃபர் சாதீக் என்பவரிடம் இருந்து அமெரிக்க டாலர்களை வழிப்பறி செய்த விவகாரத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil arrest


சென்னை நந்தனத்தில் ஜஃபர் சாதீக் என்பவர் தனது நண்பர் தமிமுன் அன்சாரியிடம் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரை கொடுப்பதற்கு சென்றுள்ளார். இரு சக்கர வாகனத்தில் அவர் செல்வதை நோட்டமிட்ட 4 பேர் ஜாஃபரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது நந்தனம் தேவர் சிலை அருகில் செல்லும் போது ஜாஃபர் மீது மிளகாய் பொடி தூவி, கம்பியால் தாக்கிய நான்கு பேர், அவரிடம் இருந்த 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரை வழிப்பறி செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், நடந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர். விசாரணையில் ஜாஃபரின் நண்பர் தமிமுன் அன்சாரி தான் இந்த வழிப்பறி சம்பவத்துக்கு தூண்டுகோலாக இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில், அமெரிக்க டாலரை வழிப்பறி செய்த விவகாரத்தில் தமிமுன் அன்சாரி உட்பட சபீர் அகமது, செல்வகுமார், வெங்கடேஷ், பத்மநாபன், அசோக் குமார், அபுபக்கர் சித்திக், முகமது முதாகீர் ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பணப்பரிவர்த்தனை ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி