ஆப்நகரம்

இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை

தலித் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொல்லப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

TNN 3 Aug 2016, 12:30 pm
தஞ்சை: தலித் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொல்லப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil dalit girl raped and murdered in thanjavur
இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை


தஞ்சாவூர் அருகே உள்ள சாலியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கலைச்செல்வி(20). இவர் அதே ஊரில் உள்ள தன்னுடைய பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் பின்புறம் சென்ற கலைச்செல்வி, பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவரது வீட்டிற்கு அருகே உள்ள முட்புதரில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது மறுநாள் தெரியவந்தது.

இதையடுத்து, உடலை கைப்பற்றிய அம்மாப்பேட்டை போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலைச்செல்வின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வாயில் கிழிந்த உள்ளாடையைத் திணித்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், சாகும் வரையில் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அப்போது, அவரது உறவினர்கள், இந்திய மாதர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சாலியமங்கலத்தைச் சேர்ந்த ரங்கநாதன்(32), குமார்(30) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். " என் புள்ளையக் கொன்ன மாதிரியே அவனுங்களும் சாகனும். எங்களுக்கு வேற எதுவும் வேணாம். அரசாங்கத்தோட எந்த உதவியும் வேண்டாம்" எனக் கூறி கலைச்செல்வியின் அப்பா ராஜேந்திரன் கதறுகிறார்.

ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண் கொல்லப்பட்டால், நாடு தழுவிய அளவில் பரபரப்பான விவாதமாகிறது. ஆனால் ஒரு கிராமத்தில் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டால், யாருமே கண்டுகொள்வது இல்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்