ஆப்நகரம்

தொடரும் ஜாதி கொடுமை; கோவில் விழாவை பார்க்க வந்த இளைஞர் அடித்து கொலை;

குஜராத்தில் தசரா விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட, கார்பா நடனத்தைப் பார்க்க வந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

TNN 2 Oct 2017, 4:18 pm
குஜராத்தில் தசரா விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட, கார்பா நடனத்தைப் பார்க்க வந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil dalit man lynched for attending garba event
தொடரும் ஜாதி கொடுமை; கோவில் விழாவை பார்க்க வந்த இளைஞர் அடித்து கொலை;


குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய கார்பா நடனம் நடத்தப்பட்டது. அப்போது,ஜெயேஷ் சோலாங்கி, பிரகாஷ் சோலங்கி என்ற இளைஞர்கள் கோயில் அருகில் இருந்த வீட்டின் முன் அமர்ந்திருந்தனர்.


அப்போது அவர்களை ஜாதி வேறுபாடு பார்த்து தரக்குறைவாக பேசிய அந்த வீட்டின் உரிமையாளர், கார்பா நடனத்தை பார்க்க உரிமை இல்லை என்று கூறி உறவினர்களுடன் சேர்ந்து இளைஞர்களைத் சராமாரியாக தாக்கினர்.

இந்த தாக்குதலில், படுகாயமடைந்த ஜெயேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி