ஆப்நகரம்

குப்பைத் தொட்டில் இறந்த நிலையில் சிசுவின் சடலம்..!

சென்னை அருகே குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

TNN 25 Dec 2016, 2:37 pm
சென்னை அருகே குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil dead infant found inside dustbin
குப்பைத் தொட்டில் இறந்த நிலையில் சிசுவின் சடலம்..!


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் நேற்று போர்வையில் சுற்றி வைக்கப்பட்டவாறு இறந்த நிலையில் சிசுவின் உடல் கிடந்துள்ளது.அந்த வழியே சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் காவல்துறையினர்,சிசுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இறந்த நிலையில் கிடந்த சிசு,குறை பிரசவத்தில் பிறந்ததா?என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.இரண்டு நாட்களுக்கு பிறகே இது குறித்த தகவலை உறுதிப்படுத்த முடியும் என திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் குறித்த தகவலை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.இதனைக் கொண்டு இறந்து கிடந்த சிசு யாருடையது என விசாரணை நடத்த அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

Dead infant found inside dustbin

அடுத்த செய்தி