ஆப்நகரம்

மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தவருக்கு 8 ஆண்டுகள் சிறை

மயக்க மருந்தை கொடுத்து, பெண்ணை பலாத்காரம் செய்த நபருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்த இருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

TNN 2 Dec 2016, 8:47 pm
டெல்லி: மயக்க மருந்தை கொடுத்து, பெண்ணை பலாத்காரம் செய்த நபருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்த இருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
Samayam Tamil delhi court orders 8 years jail for rapist
மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தவருக்கு 8 ஆண்டுகள் சிறை


பாதிக்கப்பட்ட பெண் டெல்லியைச் சேர்ந்தவர் என்பதும் அவரிடம் நண்பர்கள் போல் பழகிய ஹர்பிந்தர் சிங், சோனு சூரி, ராகேஷ் சாப்ரா ஆகிய மூவரும், அவரை ஏமாற்றி அமிர்தசரஸ் அழைத்துச்சென்று பலாத்காரம் செய்திருப்பதும் அந்த பெண் காவல்துறையில் அளித்துள்ள புகாரின் மூலம் தெரியவந்துள்ளது.

அவர்கள் மூவரும் குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து தன்னை மயக்கமடையச் செய்ததாகவும் மயக்க நிலையிலேயே ராகேஷ் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ஹர்பிந்தர் சிங், சோனு சூரி, ராகேஷ் சாப்ரா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது. ராகேஷுக்கு 8 ஆண்டு சிறை தண்டனையும் அவருக்கு உடந்தையாக இருந்த மற்ற இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டது.

அடுத்த செய்தி