ஆப்நகரம்

டெல்லி: மகன் பட்டாசு வெடித்ததற்காக, தந்தையைக் கைது செய்த போலீஸ்!

தடையை மீறி பட்டாசு வெடித்ததால்,சிறுவனின் தந்தையை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 4 Nov 2018, 3:40 pm
டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததால்,சிறுவனின் தந்தையை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil டெல்லி: மகன் பட்டாசு வெடித்ததற்காக, தந்தையைக் கைது செய்த போலீஸ்!
டெல்லி: மகன் பட்டாசு வெடித்ததற்காக, தந்தையைக் கைது செய்த போலீஸ்!


காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், வரும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, வெறும் 2 மணிநேரம் பட்டாசு வெடிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இருப்பினும், காற்று மாசுபாடு அதிக அளவில் இருப்பதால், தலைநகர் டெல்லியில் மட்டும் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி காசிபூர் பகுதியில், சிறுவன் ஒருவன் பட்டாசு வெடித்துள்ளான். இதையடுத்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் அந்தச் சிறுவனிடம் பட்டாசு வெடிக்கக் கூடாது என எச்சரித்துள்ளனர். ஆனால், அந்தச் சிறுவன் அவர்கள் பேச்சை கேட்காததால், அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் தந்தையைக் கைது செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவருக்கு அதிகபட்ச அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி