ஆப்நகரம்

சிகரெட் எங்கே கிடைக்கும் எனக் கேட்டவர் படுகொலை

சிகரெட் எங்கே கிடைக்கும் என விசாரித்தவர் படுகொலை செய்யப்பட்ட துயரம் தலைநகர் டெல்லியில் நடத்திருக்கிறது.

Samayam Tamil 20 Aug 2018, 8:39 pm
சிகரெட் எங்கே கிடைக்கும் என விசாரித்தவர் படுகொலை செய்யப்பட்ட துயரம் தலைநகர் டெல்லியில் நடத்திருக்கிறது.
Samayam Tamil 65465811


தெற்கு டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் ராகுல் மற்றும் அவரது சகோதரர் நவீன் ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொள்ள விஜய் விஹார் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இரவில் வெளியே சென்ற அவர்கள் அப்பகுதியில் கூட்டமாக இருந்த சில இளைஞர்களை அணுகி அப்பகுதியில் சிகரெட் எங்கே கிடைக்கும் என்று கேட்டிருக்கிறார்கள். அப்போது கூட்டத்தில் ஒருவர் தவறாக ஏதோ கூறியதில் ராகுல் மற்றும் நவீன் ஆகியோர் அவருடன் வாக்குவாதம் நடத்தியுள்ளனர்.

அப்போது, அந்த நபர் ராகுல் மற்றும் நவீன் ஆகியோரை நெஞ்சில் பலமாக தாக்கியதில் இருவரும் நிலைகுலைந்து விழுந்துள்ளனர். தாக்கிய உடன் அவரும் அவரது நண்பர்களும் அங்கிருந்து அகன்றுவிட்டனர். பின், அப்பகுதி மக்கள் ராகுல் மற்றும் நவீனை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ராகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், நவீனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வுசெய்த போலீசார் ராகுல் மற்றும் நவீன் ஆகியோரைத் தாக்கிய முக்கிய குற்றவாளி நிதின் என்று அடையாளம் கண்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு தடயவியல் பிரிவினரும் அனுப்பப்பட்டுள்ளனர்.

நிதினின் குடும்பத்திரை போலீசார் தொடர்புகொண்டு விசாரித்தபோது அவர் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என்று கூறியிருக்கின்றனர். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் பலரிடம் அடையாளங்களைக் கூறி தேடச் செய்தல், நிதினையும் அவருடன் இருந்த அவரது சில நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். நிதின் வேலை இல்லாதவர் என்றும் சம்பவத்தின் போது அவர் குடித்திருந்தார் என்றும் விசாரணையில் தெரிந்துள்ளது. இதனால், அவரது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்