ஆப்நகரம்

நெல்லையில் டெங்கு பாதித்த குழந்தைகளை திறந்த வெளியில் படுக்க வைக்கப்பட்ட அவலம்

டெங்கு பாதித்த 70க்கும் மேற்பட்ட குழந்தைகளை மருத்துவமனையின் திறந்த வெளியில் படுக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 25 Nov 2017, 3:21 pm
திருநெல்வேலி : டெங்கு பாதித்த 70க்கும் மேற்பட்ட குழந்தைகளை மருத்துவமனையின் திறந்த வெளியில் படுக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil dengue patient kept in out of hospital in tirunelveli government hospital
நெல்லையில் டெங்கு பாதித்த குழந்தைகளை திறந்த வெளியில் படுக்க வைக்கப்பட்ட அவலம்


இதுகுறித்து பெற்றோர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அந்த அறையில் ஆலோசனை கூட்டம் ஒன்று இன்று (நவம்பர் 25) நடைப்பெற உள்ளது. இதற்காக தான் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தவர்களை வெளியேற்றப்பட்டதாக அறிவித்தனர்.

டெங்கு காய்ச்சல் உள்ளவர்களை திறந்த வெளியில் படுக்க வைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மூலம் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி