ஆப்நகரம்

தாயின் உடலை பைக்கில் எடுத்துச் சென்ற மகன்!

மருத்துவமனையில் அமரர் ஊர்தி மறுக்கப்பட்டதால் இறந்த தாயின் உடலை மகன் பைக்கில் கொண்டு சென்ற அவலம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.

Samayam Tamil 11 Jul 2018, 12:03 pm
மருத்துவமனையில் அமரர் ஊர்தி மறுக்கப்பட்டதால் இறந்த தாயின் உடலை மகன் பைக்கில் கொண்டு சென்ற அவலம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.
Samayam Tamil R7yFYsIFRYtG6Wm8


மத்தியப் பிரதேச மாநிலம் மாநிலம் மோகன்கார்க் மாவட்டத்தில் டிகாம்கார்க் பகுதியைச் சேர்ந்தவர் குன்வர் பாய். இவர் சனிக்கிழமை பாம்பு கடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக மொஹங்கரத் சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார் அவரது மகன் ராஜேஷ். ஆனால் வழியிலே அவர் உயிரிழந்துவிட்டார்.

ராஜேஷ் தான் தாயின் கொண்டுசெல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் அமரர் ஊர்தி கேட்டபோது அதனைக் கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்புத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் உறவினர் ஒருவர் உதவியுடன் தாயின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து 35 கிலோ மீட்டருக்கு எடுத்துச் சென்றுள்ளார். பின்பு குன்வர் பாயின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்ப்ட்டது.
ராஜேஷ் தாய்க்கு பாம்பு கடித்த உடனே மருத்துவமனைக்கு எடுத்துவரவில்லை. குணமாகிவிடும் என்ற நம்பிக்கையில் கோயிலுக்கு அழைத்துச்சென்றுள்ளார். மருத்துவமனைக்குத் தாமதமாக வந்ததால் அவரது தாயைக் காப்பாற்ற முடியவில்லை என்று மோகன்கார்க் மாவட்டக் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்