ஆப்நகரம்

காலால் மிதித்து ஆசி வழங்கும் விசித்திர பூசாரி..!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ‘ தன்னுல சாமி’ கோவிலில் ,பக்தர்களுக்கு காலால் மிதித்து ஆசி வழங்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

TNN 15 Apr 2017, 7:51 pm
ஆந்திர மாநிலத்தில் உள்ள ‘ தன்னுல சாமி’ கோவிலில் ,பக்தர்களுக்கு காலால் மிதித்து ஆசி வழங்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil devotees kicked by the baba to fullfill their wishes in andhra temple
காலால் மிதித்து ஆசி வழங்கும் விசித்திர பூசாரி..!


ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பட்டிகொண்டா கிராமத்தில் ’தன்னுல சாமி’ கோவில் அமைந்துள்ளது. பட்டிகொண்டா கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள், இந்த கோவில் திருவிழாவின் போது சாமியாடிக் கொண்டு வரும் பூசாரியிடம் மிதி வாங்கினால் தங்கள் பிரச்சனை தீரும் என நம்புகின்றனர்.

இந்த கோவில் திருவிழாவின் போது சுவாமி விக்ரகத்தை சுமந்து வரும் பூசாரி, கோவிலுக்கு வெளியே சாமியாடிக் கொண்டு வரும் போது அவரிடம் மிதி வாங்குவதற்காக அங்கிருக்கும் பக்தர்கள் தங்கள் பின்பக்கத்தை காட்டியவாறு நிற்கின்றனர். அங்கு நிற்பவர்களில் யாரை பூசாரி காலால் மிதிக்கிறாரோ, அவரின் வேண்டுதல்கள் நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த வழக்கமானது பல தலைமுறையாக அந்த கோவிலில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை குறித்த வீடியோ கீழே உங்களுக்காக...!

Bizarre Tradition !!! In Kurnool district of Andhra, it's a faith that being kicked by "kicking baba" brings prosperity to their village ! pic.twitter.com/n7V94KehBo — SAKSHI KHANNA (@tweetsakshi) April 14, 2017 Devotees kicked by the Baba to fullfill their wishes in Andhra Temple

அடுத்த செய்தி