ஆப்நகரம்

காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வந்தவர் தீக்குளித்து தற்கொலை!

தருமபுரி மாவட்டத்தில் புகார் கொடுக்க வந்த ஆசைதம்பி என்பவர் காவல்நிலையத்திலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Mar 2018, 1:25 am
தருமபுரி மாவட்டத்தில் புகார் கொடுக்க வந்த ஆசைதம்பி என்பவர் காவல்நிலையத்திலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil dharmapuri man commits self immolation in police station
காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வந்தவர் தீக்குளித்து தற்கொலை!


தருமபுரி மாவட்டம் மஞ்சப்பட்டியைச் சேர்ந்த ஆசைதம்பி என்பவர் குடும்பத்தகராறு குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். ஏற்கனவே காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஆசைதம்பி நேற்று புகார் அளிக்க வந்த போது காவல்நிலையத்திலேயே தீக்குளித்து செய்து கொண்டார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அங்கிருந்த போலீசார் தீயை அனைக்க முயன்றனர். இருந்த போதிலும், தீ அதிகமாக பற்றிக் கொண்டதால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அடுத்த செய்தி