ஆப்நகரம்

பிரியாணிக்கு பாக்சிங்... பரோட்டாவுக்கு அரிவாள் மிரட்டல் : திமுக வழக்கறிஞர் அட்டூழியம்

பிரியாணி கேட்டு பாக்சிங் செய்து திமுக.,வுக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பட்ட நிலையில், தற்போது புரோட்டா சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் அரிவாள் காட்டி மிரட்டிய திமுக வழக்கறிஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 31 Aug 2018, 8:28 pm
பிரியாணி கேட்டு பாக்சிங் செய்து திமுக.,வுக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பட்ட நிலையில், தற்போது புரோட்டா சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் அரிவாள் காட்டி மிரட்டிய திமுக வழக்கறிஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Samayam Tamil DMK advocate


அண்மையில் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணி கேட்டு பாக்சிங் செய்து கடை ஊழியர்களை தாக்கிய விவகாரத்தில் யுவராஜ் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த விவகாரம் திமுக தலைவர் முக ஸ்டாலின் வரை சென்று, அவரே கடைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். யுவராஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

புரோட்டாவுக்கு அரிவாள் :
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள மருங்கூரில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா சாப்பிட்ட ஒருவர் பணம் கேட்டதற்கு அரிவாள் கொண்டு மிரட்டியுள்ளார். அதோடு, கடையில் இருந்த சில பொருட்களை அரிவாளால் சேதப்படுத்தியுள்ளார். இதனால் ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவர்கள் தலைதெறிக்க ஓடினர்.

இந்த சம்பவம், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி வீடியோ ஆதாரத்தை வைத்து விசாரித்த போலீஸார் அது சுதா அமர்சிங் என்ற வழக்கறிஞர் என்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த 2012ல் திமுக வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டவர். தற்போது அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி