அனைத்து இடங்களிலும் தேசிய கீதத்தை பாடச் சொல்லி எனது நாட்டுப்பற்றை சோதிக்க வேண்டாம் என்று நடிகா் கமல்ஹாசன் டுவிட்டாில் பதிவிட்டுள்ளாா்.
திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படுவது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமா்வு, திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்காதவா்களை தேசத்திற்கு விரோதிகள் என்று கூறிவிட முடியது. அவா்களை கட்டாயப்படுத்தி எழுந்து நிற்குமாறு உத்தரவிடவும் உாிமை இல்லை. எனவே, தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்கவேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தனா்.
இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
சிங்கப்பூரில் அந்நாட்டு தேசிய கீதம் தினமும் நள்ளிரவில் பாடப்படுகிறது. அதேபோல் இந்தியாவிலும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பலாம். எனது தேசப்பற்றை சோதிக்க எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தை பாடச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என்று பதிவிட்டுள்ளாா்.
திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படுவது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமா்வு, திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்காதவா்களை தேசத்திற்கு விரோதிகள் என்று கூறிவிட முடியது. அவா்களை கட்டாயப்படுத்தி எழுந்து நிற்குமாறு உத்தரவிடவும் உாிமை இல்லை. எனவே, தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்கவேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தனா்.
இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
சிங்கப்பூரில் அந்நாட்டு தேசிய கீதம் தினமும் நள்ளிரவில் பாடப்படுகிறது. அதேபோல் இந்தியாவிலும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பலாம். எனது தேசப்பற்றை சோதிக்க எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தை பாடச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என்று பதிவிட்டுள்ளாா்.