ஆப்நகரம்

தஞ்சாவூரில் விவசாயம் செய்யும் அமெரிக்க மருத்துவ தம்பதி!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள செக்கான்கன்னி என்ற ஊரில் அமெரிக்காவில் கால்நடை மருத்துவர்களாக இருந்த ஆனந்த், ஆனந்தி என்ற தம்பதி இயற்கை முறையில் விவசாயம் செய்து வருவது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

TNN 7 Nov 2017, 10:10 pm
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள செக்கான்கன்னி என்ற ஊரில் அமெரிக்காவில் கால்நடை மருத்துவர்களாக இருந்த ஆனந்த், ஆனந்தி என்ற தம்பதி இயற்கை முறையில் விவசாயம் செய்து வருவது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
Samayam Tamil doctor couple who worked in america quit their job and now doing agriculture in tanjore
தஞ்சாவூரில் விவசாயம் செய்யும் அமெரிக்க மருத்துவ தம்பதி!


அமெரிக்காவில் லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு, தஞ்சாவூரில் உள்ள தில்லையம்பூரில் விவசாயம் செய்து வருகின்றனர் இந்த தம்பதியினர்.

ஆனந்தம்பண்ணை என்ற அந்த இடத்தில் 13 ஏக்கரில் பாரம்பரிய ரகங்களான மதுரை பொன்னி, மாப்பிள்ளை சம்பா, குள்ளக்கார், கருங்குறுவை, ஆத்தூர் கிச்சடி சம்பா, ஜீரக சம்பா போன்ற நெல் வகைகளை பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர்.

பயிருக்கான உரங்களை இயற்கை முறையில் இவர்களே தயார் செய்கின்றனர். இதனால் பயிர்கள் பூச்சிகள் தொல்லை இல்லாமல், பசுமையாக உள்ளன. இதுமட்டுமின்றி,இவர்கள் நிலத்தில் கத்திரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பூசணி போன்ற காய்கறிகளையும் வளர்க்கின்றனர்.

இவற்றை வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுக்கு இவர்களே விற்பனை செய்கின்றனர். இவை அனைத்திற்கும் மேலாக, தங்களிடம் வேலை பார்க்கும் விவசாயிகளுக்கு அருகில் இருக்கும் நிலத்தில் வீடு கொடுத்து, அவர்கள் குழந்தைகளின் கல்விச் செலவிற்கும் இவர்களே உதவுகின்றனர்.

Doctor couple who worked in America quit their job and now doing agriculture in Tanjore.

அடுத்த செய்தி