தண்டு உயிரணுக்களை தவறாக பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாக்டர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குழந்தை பிரசவிக்கும் போது, தொப்புள் கொடியில் இருந்து தண்டு உயிரணுக்கள் பத்திரப்படுத்தும் வழக்கம் வெளிநாடுகளில் உள்ளன. இதன் மூலம் தாய் மற்றும் குழந்தையின் எதிர்கால சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
இந்தியாவில் இந்த தண்டு உயிரணுக்களை சேமித்து வைக்கும் அவசியம் குறித்த விழிப்புணர்வு சற்று குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில், அனைத்து டாக்டர்களுக்கும் இமெயில் மூலம் தண்டு உயிரணுக்களை தவறாக பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இது குறித்து, மருத்துவ கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையில், சில தனியார் மருத்துவமனைகள், வங்கிகள், சோதனை என்ற பெயரில் தண்டு உயிரணுக்கள் மற்றும் எலும்பு மஜ்ஜைகளை தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளது.
மேலும், சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமலும், முறைகேடாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின் தண்டு உயிரணுக்களை வைத்து சோதனை நடத்தினாலோ, அல்லது, இரத்த குறைபாடு நோய் தவிர மற்ற உடல் நலக் கோளாறுகளுக்கோ பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
குழந்தை பிரசவிக்கும் போது, தொப்புள் கொடியில் இருந்து தண்டு உயிரணுக்கள் பத்திரப்படுத்தும் வழக்கம் வெளிநாடுகளில் உள்ளன. இதன் மூலம் தாய் மற்றும் குழந்தையின் எதிர்கால சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
இந்தியாவில் இந்த தண்டு உயிரணுக்களை சேமித்து வைக்கும் அவசியம் குறித்த விழிப்புணர்வு சற்று குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில், அனைத்து டாக்டர்களுக்கும் இமெயில் மூலம் தண்டு உயிரணுக்களை தவறாக பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இது குறித்து, மருத்துவ கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையில், சில தனியார் மருத்துவமனைகள், வங்கிகள், சோதனை என்ற பெயரில் தண்டு உயிரணுக்கள் மற்றும் எலும்பு மஜ்ஜைகளை தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளது.
மேலும், சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமலும், முறைகேடாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின் தண்டு உயிரணுக்களை வைத்து சோதனை நடத்தினாலோ, அல்லது, இரத்த குறைபாடு நோய் தவிர மற்ற உடல் நலக் கோளாறுகளுக்கோ பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.