ஆப்நகரம்

வளர்ப்பு நாய் 'உச்சா' போனதால் உரிமையாளருக்கு அடி..!

பூந்தொட்டியில் நாய் சிறுநீர் கழித்ததற்காக நாயின் உரிமையாளரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 2 Sep 2016, 2:15 am
பூந்தொட்டியில் நாய் சிறுநீர் கழித்ததற்காக நாயின் உரிமையாளரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil dogs pee triggers clash between two family
வளர்ப்பு நாய் 'உச்சா' போனதால் உரிமையாளருக்கு அடி..!


டெல்லியைச் சேர்ந்த தேவேஷ் என்பவர் தினந்தோறும் இரவு நேரத்தில் தனது நாயை வாக்கிங் அழைத்துச் செல்வது வழக்கம்.அப்படி நேற்றிரவு தனது நாயை அழைத்துச் செல்லும் போது, பிரிஜ் லால் என்பவரின் வீட்டின் முன்னே இருந்த பூந்தொட்டியில் நாய் சிறுநீர் கழித்துள்ளது.

இதனை பார்த்து கோபமடைந்த பிரிஜ் லாலின் மகன்,தேவேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதனை தொடர்ந்து இரு தரப்பு குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை நடந்துள்ளது.கோபமடைந்த பிரிஜ் லால் குடும்பத்தினர்,தேவேஷ் மற்றும் அவருடைய தாயை தாக்கியுள்ளனர்.இதில் தேவேஷின் தாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது.தேவேஷும் காயமடைந்தார்.

இதனை தொடர்ந்து பிரிஜ் லால் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,அவரது மகனை கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி