ஆப்நகரம்

அப்துல்கலாமிற்கு கோவிலில் சிலை வைத்த தமிழர்களுக்கு முகமது கைப் பாராட்டு!!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு கோவிலில் சிலை வைத்த ராமேஸ்வரம் மக்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Samayam Tamil 19 Jul 2018, 1:32 am
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு கோவிலில் சிலை வைத்த ராமேஸ்வரம் மக்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Samayam Tamil அப்துல்கலாமிற்கு கோவிலில் சிலை வைத்த தமிழர்களுக்கு முகமது கைப் பாராட்டு!!
அப்துல்கலாமிற்கு கோவிலில் சிலை வைத்த தமிழர்களுக்கு முகமது கைப் பாராட்டு!!


இந்தியாவின் முன்னணி விண்வெளி விஞ்ஞானியாக திகழ்ந்தவர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம். தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில் பிறந்த அப்துல் கலாம் அவர்கள், 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தார்.

இந்தியாவின் மிகச் சிறந்த குடியரசுத் தலைவர்களில் ஒருவராக திகழும் அவர், மாணவர்களிடம் அதிக அன்பு கொண்டவர். மாணவர்களால் மட்டுமே இந்தியாவை வல்லரசாக்க முடியும் என்று நம்பியவர். அவரை முன்னோடியாக கொண்டு இன்றளவும் இளைஞர்கள் பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இராமேஸ்வரத்தில் உள்ள கோவில் ஒன்றில் அப்துல்கலாம் ஐயா அவர்களின் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி, மிகவும் வைரலான நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி