ஆப்நகரம்

தம்பியின் 3 வயது மகளுக்கு பாலியல் கொடுமை; குற்றவாளி அண்ணன் கைது!

தம்பியின் மகளுக்கு பாலியல் கொடுமை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 21 Apr 2018, 1:16 pm
திருவள்ளூர்: தம்பியின் மகளுக்கு பாலியல் கொடுமை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil Girl Raped
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை


திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ். இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு 3 வயதில் மகள் இருக்கிறார்.

ரமேஷின் அண்ணன் சுரேஷ், அருகிலுள்ள வீட்டில் வசித்து வந்தார். இதனால் சிறுமி, பெரியப்பாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் ரமேஷின் மகளை, சுரேஷ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதைக் கண்ட சிறுமியின் தாய் புனிதா அதிர்ச்சியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சுரேஷ் ஓடி தலைமறைவானார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திருப்பதியில் சுரேஷை கைது செய்தனர்.

Elder brother arrested for abusing his younger brother's 3 year old kid.

அடுத்த செய்தி