ஆப்நகரம்

ஐயோ!! எனக்கிருந்த உன்னையும் இழந்தேனே... கதறும் அம்மா குரங்கு!

சுய நினைவு இழந்த தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு அம்மா குரங்கு ஒன்று அழும் காட்சி பார்ப்பவர்களையும் நெஞ்சு உருக வைக்கும். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

TOI Contributor 13 May 2017, 1:52 pm
சுய நினைவு இழந்த தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு அம்மா குரங்கு ஒன்று அழும் காட்சி பார்ப்பவர்களையும் நெஞ்சு உருக வைக்கும். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Samayam Tamil emotional viral photo why this mother monkey is crying
ஐயோ!! எனக்கிருந்த உன்னையும் இழந்தேனே... கதறும் அம்மா குரங்கு!


மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் புகைப்படக் கலைஞராக இருக்கும் அவினாஷ் அங்குள்ள குரங்குகளை புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது, அங்கு ஒரு அம்மா குரங்கு அவினாஷின் கவனத்தை ஈர்த்துள்ளது. அம்மா குரங்கு தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு இருக்கும்போதே, திடீரென, தனது குழந்தை குரங்கு சுயநினைவு இழந்து விடுகிறது. குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு அம்மா குரங்கு அழுகிறது. தொடர்ந்து இந்தக் காட்சிகளை படம் எடுத்துக் கொள்கிறார் அவினாஷ்.

அவரால் இந்த காட்சிகளை படம் பிடித்த பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பேச முடியவில்லை. பாலூட்டி வகையைச் சேர்ந்த குரங்கிற்கும் இந்த அளவிற்கு பாசம் இருக்குமா? அந்த சோகத்தை வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை என்று வருந்துகிறார் அவினாஷ்.

இந்தப் புகைப்படத்தை கடந்த ஏப்ரல் மாதம் அவினாஷ் எடுத்துள்ளார். ஆனாலும், தற்போதுதான் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. தனது இத்தனை வருட வாழ்க்கையில் இதுபோன்ற உணர்வுமிக்க புகைப்படத்தை தான் எடுத்தது இல்லை என்கிறார் அவினாஷ்.

அனைத்து வகையான பாலூட்டிகளுக்கும் ஒரே மாதிரியான நரம்பு செயல்பாடுகள், நரம்பியல் வேதியியல், எண்ணங்கள், உணர்வுகள் இருக்கும் என்று உடற்கூறு ஆய்வாளர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அப்படியென்றால், பாலூட்டிகள் அல்லாதவற்றுக்கு உணர்வுகள் இருக்காதா என்ற கேள்வியும் எழும். அவர்களுக்கும் உணர்வு இருக்கும். அவர்களுக்கு எழும் உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்த முடியாது என்ற கருத்தும் எழுந்துள்ளது.
Emotional Viral photo why this mother monkey is crying?

அடுத்த செய்தி