ஆப்நகரம்

ஈரோடு: முதியவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை வழிப்பறி செய்த கொள்ளையர்கள்!

கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கடத்தூர் போலீசார், தப்பியோடிய கொள்ளையர்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Samayam Tamil 5 Dec 2018, 7:11 pm
ஈரோட்டில் வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்த முதியவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil bike snatch


ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கட்டிக்கல்மேட்டைச் சேர்ந்தவர் காளியண்ணன் (70). இவர் நேற்று நம்பியூரில் உள்ள வங்கியில் இருந்து பணம் எடுத்துவிட்டு தனது மருமகளுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

பின்னர், 1.90 லட்சம் ரூபாயை கட்டிக்கொண்டு தனது ஊருக்கு பேருந்தில் சென்றார். பேருந்தில் இருந்து இறங்கியதும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இவரது நடவடிக்கைகளை கவனித்த அடையாளம் தெரியாத 2 நபர்கள், பைக்கில் அவருக்கு பின்புறமாக நைசாக வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பணப்பையை பறித்துச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த காளியண்ணன் திருடன் திருடன் என்று கூச்சலிட, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பைக்கை பிடிக்க முற்பட்டனர். ஆனால், கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பிச் சென்றனர்.

இந்த வழிப்பறி கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கடத்தூர் போலீசார், தப்பியோடிய கொள்ளையர்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி