ஆப்நகரம்

ஈரோட்டு: டாக்டரிடம் இருந்து லேப்டாப், செல்போனை பறித்துச் சென்ற வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்!

ஈரோட்டில் ஓடும் பேருந்தில் டாக்டரிடம் இருந்து லேப்டாப், செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 13 Oct 2018, 5:07 pm
ஈரோட்டில் ஓடும் பேருந்தில் டாக்டரிடம் இருந்து லேப்டாப், செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil teacher arrested


சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் அருகே உள்ள புதுஉடையம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(37). இவர் அவினாசியில் செயல்படும் தனியார் மருத்துவனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக தினமும் அவினாசிக்கு பேருந்தில் தான் பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று ராஜ்குமார் அவினாசிக்கு பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, அவருடைய லேப்டாப் பை, செல்போன் ஆகியவற்றை வாலிபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், உடனே சுதாரித்துக் கொண்டு திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே அவரை பின்தொடர்ந்தார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் மயில்ராஜ் என்பதும், ஈரோடு அடுத்துள்ள தாமரை பாளையத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர் பறித்துச் சென்ற லேப்டாப், செல்போன் ஆகியவற்றை டாக்டரிடம் ஒப்படைத்த போலீசார், மயில்ராஜை ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்