ஆப்நகரம்

பெண்ணிடம் கொள்ளையடித்த திருநங்கைகள்.

​ மும்பை : வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மயக்க ஸ்ப்ரே தெளித்து 300கிராம் தங்க நகையை திருடிய இரண்டு திருநங்கைகள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 29 Aug 2016, 5:20 pm
மும்பை : வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மயக்க ஸ்ப்ரே தெளித்து 300கிராம் தங்க நகையை திருடிய இரண்டு திருநங்கைகள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil eunuchs spray sleep inducer rob woman
பெண்ணிடம் கொள்ளையடித்த திருநங்கைகள்.


கேத்தல் ஜேத்வா என்ற பெண்மணி மும்பையில் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை விட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இவர் வீட்டின் கதவை யாரோ தட்டு சத்தம் கேட்டது. உடனே கதவை திறந்து யாரென பார்த்தார். அப்போது இரண்டு திருநங்கைகள் அங்கு நின்றிருந்தனர்.

அந்த திருநங்கைகள் குடிக்க தண்ணீர் வேண்டு என்று கேட்டனர். கேத்தா அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தார் . திடிரென அவரின் முகத்தில் மயக்கமருந்து ஸ்ப்ரேவை அந்த திருநங்கைகள் தெளித்தனர். இதில் அந்த பெண் கேத்த மயக்கமடைந்தார். மயக்கம் தெளிந்து அவர் பார்த்த போது அவர் அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் அவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து திவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி