ஆப்நகரம்

எக்ஸாம் ஃபர்ஸ்ட்... மேரேஜ் நெக்ஸ்ட்.... மணக்கோலத்தில் தேர்வெழுதிய மாணவி

ராசிபுரத்தில் திருமணமேடைக்கு செல்ல வேண்டிய நேரத்தில், மணக்கோலத்தில் ஒரு மாணவி பி.எட். தேர்வு எழுதினார்.

TNN 2 Jun 2017, 11:39 am
ராசிபுரத்தில் திருமணமேடைக்கு செல்ல வேண்டிய நேரத்தில், மணக்கோலத்தில் ஒரு மாணவி பி.எட். தேர்வு எழுதினார்.
Samayam Tamil exam first marriage next b ed student did it
எக்ஸாம் ஃபர்ஸ்ட்... மேரேஜ் நெக்ஸ்ட்.... மணக்கோலத்தில் தேர்வெழுதிய மாணவி


நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பொன்மதி ராசிபுரம் டவுன் சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட். முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் பொன்மதிக்கும், பேளுக்குறிச்சி அருகே உள்ள தாண்டாக் கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனுக்கும் நேற்று காலை திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி பொன்மதிக்கு பி.எட். தேர்வு தொடங்கியது. நேற்று அவருக்கு தேர்வு நடந்தது. எனவே, தேர்வை எழுத விரும்புவதாக மாப்பிள்ளை வீட்டாரிடம் அனுமதி கேட்டார். அவர்களும் அனுமதி அளித்ததால், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் இருந்த தேர்வு மையத்துக்கு பொன்மதி மணக்கோலத்தில் காலை 10 மணிக்கு வந்தார்.

பின்னர் அவர் மணக்கோலத்திலேயே அந்த தேர்வை எழுதினார். இதை பார்த்த மையத்தில் இருந்த சக மாணவ-மாணவிகள் தேர்வு முடிந்தவுடன் பொன்மதிக்கு உற்சாக வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தேர்வு மையத்துக்கு நேரில் வந்த புதுமாப்பிள்ளை மணிகண்டன் அவரை காரில் அழைத்துச்சென்றார்.

அடுத்த செய்தி