ஆப்நகரம்

பேஸ்புக்கில் கிளம்பிய விவசாய புரட்சி - உழவர்களின் தேவைகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வற்புறுத்தல்

கர்நாடகாவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் போது விவசாயிகளின் கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையாக அரசியல் கட்சிகள் வெளியிட கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 23 Mar 2018, 4:36 pm
புத்தூர் : கர்நாடகாவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் போது விவசாயிகளின் கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையாக அரசியல் கட்சிகள் வெளியிட கோரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil farmers


கர்நாடகாவின் புத்தூர் மற்றும் சுல்லியா பகுதியை சேர்ந்த விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கான ஒரு பேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் 2.77 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 2.30 லட்சம் பேர் இந்தியர்கள் என்றும் மீதம் உள்ளவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என அந்த பேஸ்புக் அட்மின் மகேஷ் புச்சாண்டி தெரிவித்துள்ளார்.

இந்த பேஸ்புக் பக்கம் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவு கூடியுள்ளது. படித்த இளைஞர்கள் விவசாயம் செய்ய விரும்பாமல் இருந்த சூழல் தற்போது மாறி, படித்த பலர் தற்போது ஆர்வமாக வேளாண்மை செய்ய வருகின்றனர். அவர்களை வரவேற்கும் விதமாக விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தேர்தல் அறிக்கை இடம் பெற வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள்:


  • விவசாய பம்புகளுக்கு 24 மணிநேர மின்சாரம்
  • விவசாய உற்பத்திக்கான சந்தை விலை பிரகாரம்
  • வேளாண் பொருட்களுக்கு விலையை குறைக்கும்போது ஆதரவு விலை அறிவிப்பு
  • நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆதரவு
  • விவசாய பொருள் விற்பனையின் போது மத்தியஸ்தரின் கட்டுப்பாடு
  • விவசாயத்தில் நுழையும் படித்த இளைஞர்களுக்கு ஆதரவு.
  • விவசாய தேவைகளை நிறைவேற்றவும், புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய படித்த இளைஞர்கள் வேளாண் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்.
  • நீர் சீர்திருத்த முறைமை கட்டாயப்படுத்துதல்
  • தாலுக்கா விவசாய வேளாண்மை கிடங்கு
  • கால்நடை வளர்ப்பு மற்றும் விற்பனைக்கான ஆதரவு
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்