ஆப்நகரம்

பொம்மை நோட்டுகளை வழங்கும் ஏடிஎம்கள்- மக்களே உஷார்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் கத்தை கத்தையாக போலியான பொம்மை ரூபாய் நோட்டுகள் வந்ததால் அதைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்

Samayam Tamil 11 Feb 2018, 9:47 pm
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் கத்தை கத்தையாக போலியான பொம்மை ரூபாய் நோட்டுகள் வந்ததால் அதைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Samayam Tamil fake currency notes distributed in atm at kanpur
பொம்மை நோட்டுகளை வழங்கும் ஏடிஎம்கள்- மக்களே உஷார்!!


உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில், வாடிக்கையாளர்கள் சிலர் ஆக்ஸிஸ் வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்துள்ளனர். அப்போது, அதில் குழந்தைகள் விளையாடும் போலியான பொம்மை 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இதன்பின், வாடிக்கையாளர்கள் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என வங்கி நிர்வாகம் பதிலளித்துள்ளதால், இது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போலியான பொம்மை நோட்டுகளை வழங்கிய ஏடிஎம் தற்போது மூடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி