ஆப்நகரம்

நர்சிங் படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி பெண் டாக்டர் கைது

சென்னையில் நர்சிங் படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

TNN 31 May 2017, 11:28 am
சென்னையில் நர்சிங் படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil fake female doctor arrested
நர்சிங் படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி பெண் டாக்டர் கைது


சென்னை கீழ்ப்பாக்கம், புல்லாபுரம் மெயின் ரோட்டில் ஆஸ்பத்திரி நடத்தி வருபவர் ராஜலட்சுமி. கடலூரைச் சேர்ந்த இவர் நர்ஸ் வேலைக்கு படித்துள்ளார். ஆனால் டாக்டர் தொழில் செய்து வந்துள்ளார். தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலை பார்த்துக்கொண்டே, டாக்டர் போல நடித்து தனியாக ஆஸ்பத்திரி நடத்தியதாக தெரிகிறது. டாக்டரை போல மருந்து சீட்டு எழுதி கொடுத்துள்ளார்.

இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் சிவபாஸ்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். டாக்டர் தொழில் செய்ததாக, நர்ஸ் ராஜலட்சுமி நேற்று கைது செய்யப்பட்டார்.

அடுத்த செய்தி