ஆப்நகரம்

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போலிச் சாமியார் கைது..!

மருத்துவம் பார்ப்பதற்காக வந்த சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த போலிச் சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

TNN 8 Mar 2017, 1:34 pm
மருத்துவம் பார்ப்பதற்காக வந்த சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த போலிச் சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil fake godman sexually abused 17 year old minor
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போலிச் சாமியார் கைது..!


ஹைதராபாத் அருகில் உள்ள ஆசாத் நகரைச் சேர்ந்த அஹ்மது கான் என்ற லாரி டிரைவர்,தன்னை சாமியார் எனவும் தனக்கு நோய்களை குணமாக்கும் சக்தி இருப்பதாகவும் பலரிடம் தெரிவித்து வந்துள்ளான்.இதனை நம்பிய பலர் அவனிடம் நோய்க்காக மருத்துவம் பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் தூக்கமின்மை நோயால் அவதிப்பட்டு வந்த தனது 17 வயது மகளை அவரது தாய் அஹ்மதுவிடம் இருமுறை அழைத்துச் சென்றுள்ளார்.இந்நிலையில் மூன்றாவது முறை அந்த சிறுமி மட்டும் தனியாக அஹ்மதுவை பார்க்க சென்றுள்ளார்.அப்போது அந்த சிறுமியை அஹமது பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த அந்த சிறுமி,நடந்தவற்றை தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.தாய் மற்றும் மகள் கொடுத்த புகாரின் பேரில் அஹமதுவை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அஹமது தன்னை சாமியார் என கூறிக் கொண்டாலும்,லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளான்.யாராவது மருத்துவம் பார்க்க வர வேண்டும் என அணுகினால் மட்டும்,பூஜைகள் செய்துள்ளான்.இவனுக்கு மனைவியும்,மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

Fake Godman sexually abused 17 year old minor

அடுத்த செய்தி