ஆப்நகரம்

Kerala Flood: 100 சென்ட் நிலத்தையே தானம் செய்ய முன்வந்த விவசாயி மகள்!!

கேரளாவைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி, தனக்காக தந்தை சேமித்து வைத்திருந்த, 100 சென்ட் நிலத்தையே கேரளா வெள்ளப்பெருக்கிற்கு தானமாக தர முன் வந்துள்ளார்.

Samayam Tamil 20 Aug 2018, 5:06 pm
கேரளாவைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி, தனக்காக தந்தை சேமித்து வைத்திருந்த, 100 சென்ட் நிலத்தையே கேரளா வெள்ளப்பெருக்கிற்கு தானமாக தர முன் வந்துள்ளார்.
Samayam Tamil Kerala Flood: 100 சென்ட் நிலத்தையே தானம் செய்ய முன்வந்த விவசாயி மகள்!!
Kerala Flood: 100 சென்ட் நிலத்தையே தானம் செய்ய முன்வந்த விவசாயி மகள்!!


கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த வரலாறு காணாத கனமழை காரணமாக, கேரளா மாநிலமே தண்ணீரிலும் கண்ணீரிலும் மூழ்கியது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரையில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், லட்சக்கணக்கான மக்கள், தங்கள் வாழ்வாதாரங்களையும் இழந்து தவித்து வருகின்றனர்.

இதையடுத்து, அரசியல் கட்சிகள், தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களால் முடிந்து பண உதவி அல்லது பொருள் உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்வாகா என்ற 9 ஆம் வகுப்பு மாணவி, தனக்காகவும் தனது தம்பியின் எதிர்காலத்திற்காகவும், விவசாயியாக இருக்கும் தனது தந்தை சேமித்து வைத்திருந்த 100 சென்ட் நிலத்தை, கேரளாவில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தானமாக வழங்குவதற்கு முன் வந்துள்ளார். அதை தானமாக வழங்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகிறார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்