ஆப்நகரம்

உயர் ஜாதி பெண்ணை காதலித்த இளைஞர்; உயிரோடு எரித்த கொல்லப்பட்ட கொடூரம்

மகளை காதலித்த இளைஞரை, அவரது தந்தை உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

TNN 27 May 2017, 7:26 pm
ஐதராபாத்: மகளை காதலித்த இளைஞரை, அவரது தந்தை உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil father burnt alive lover of his daughter in andhra
உயர் ஜாதி பெண்ணை காதலித்த இளைஞர்; உயிரோடு எரித்த கொல்லப்பட்ட கொடூரம்


ஆந்திர மாநிலம் நல்கொண்டா அருகே வாலிகொண்டாவைச் சேர்ந்தவர் நரேஷ்(23). அவர் தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த ஸ்வாதி என்ற உயர் ஜாதி பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அதற்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையில் இருவரும் கடந்த மார்ச் 23ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு, மும்பையில் வசித்து வந்தனர். இந்நிலையில் மகளின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்து, அவரது தந்தை சமாதானம் பேசியுள்ளார். இருவரையும் சேர்ந்து வாழ அனுமதிப்பதாக கூறி அழைத்துள்ளார். அதை நம்பி இருவரும் மே 11ஆம் தேதி, ஆந்திரா திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மே 15ஆம் தேதி மகனை காணவில்லை என்று நரேஷின் தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மே 16ஆம் தேதி சுவாதி அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஸ்வாதியின் தந்தை சீனிவாச ரெட்டிக்கு சொந்தமான இடத்தில் எரிந்த நிலையில் கிடந்த உடலை கண்டுபிடித்தனர். அந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அது நரேஷின் உடல் என்று தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில் நரேஷை நான் தான் கொலை செய்ததாக சீனிவாச ரெட்டி கூறியதை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

Father burnt alive lover of his daughter in Andhra.

அடுத்த செய்தி